Sunday, April 24, 2005

Hotel Rwanda

அசல் வலைப்பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: கறுப்பி


இனப்படுகொலை என்பது எமக்குப் புதிதல்ல. இருந்தும் இனப்படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் இனப்படுகொலையால் பாதித்த எம்மையே பேச்சு மூச்சு இல்லாமல் ஆக்கி விடும் என்பதை Hotel Rwanda படம் பார்த்த போது நான் உணர்ந்து கொண்டேன். ரொறொண்டோ சர்வதேச திரைப்படவிழாவின் போது இப்படத்தைத் தவற விட்டுப் பின்னர் திரையரங்கிற்கு வந்த போது பார்க்க முடிந்தது. திரைப்படவிழாவில் மக்கள் தேர்விற்கான பரிசை இப்படம் பெற்றுள்ளது.
முற்று முழுதாக உண்மைக் கதையை வைத்து இப்படம் எடுக்கப்பட்டாலும். உண்மை முழுமையாக திரைப்படத்தில் வெளிவரவில்லை என்பது விமர்சகர்களின் கருத்து.
1994 ம் ஆண்டு Rwanda நாட்டின் இரண்டு இனங்களாக Tutsi (சிறுபான்மை)இ Hutu(பெரும்பான்மை) மக்களுக்கிடையிலான உள்நாட்டுப் போராட்டத்தில் Tutsi மக்கள் 100 நாட்களுக்குள் 800,000 மேலாக கொல்லப்பட்டுள்ளார்கள்.
பெல்ஜியம் முதலாளி ஒருவரின் கொட்டேல் ஒன்றில் மனேஜராக வேலை செய்த Paul Rusesabagina எப்படி ஆயிரத்திற்கும் மேற்பட்ட Tutsi மக்களைக் காப்பாற்றினார் என்பதே இப்படத்தில் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் பல மக்களால் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. Hutu இனத்தைச் சேர்ந்த அவர் தனது Tutsi மனைவியையும் குழந்தைகளையும் உறவினர்களையும் அயலவர்களையும் காப்பாற்ற என்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட Tutsi மக்களைத் தான் வேலை செய்த கொட்டேலுக்கு அழைத்து வந்து தனது பேச்சுத் திறமையாலும் தன்னிடமிருந்த பணம்,நகைகள்,குடிவகைகள் போன்றவற்றை லஞ்சமாகக் கொடுத்தும் அவர்கள் எல்லோரது உயிர்களையும் மயிர் இழையில் காப்பாற்றினார் என்பதையே திரைப்படம் காட்டுகின்றது.
இந்த மாபெரும் அழிவு கண்ணுக்கு முன்னால் நடந்தும் எந்த ஒரு நாடும் உதவிக்கு முன்வரவில்லை. மாறாக அங்கு உதவி செய்து கொண்டிருந்த UN ஊழியர்களையும் வேறு பலரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு வழங்கப்பட்டது.
சுனாமியின் போது முண்டியடித்துக் கொண்டு உதவி செய்த நாடுகள் ஏன் Rwanda மக்களுக்கு உதவி செய்யவில்லை என்பது கனேடியத் தொலைக்காட்சிகளில் கேள்வியாக எழுப்பப்பட்டது. ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை.
நாம் கறுப்பர்கள் எம்மை உலகு மக்களாகக் கணிக்கவில்லை என்று கொட்டேல் மனேஜர் அடிக்கடி மக்களுக்குச் சொல்லி நாமாக எம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று தனக்குத் தெரிந்த வகையில் தனித்து ஒருவராக நின்று போராடி பல மக்களின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளார்.
உணவிற்காக வெளியே காரில் போன கொட்டேல் முதலாளி புகார் படிந்த பாதையில் கார் ஓட முடியாமல் அசைவதைக் கண்டு கார் எங்கோ தவறான பாதையில் போவதாக நினைத்து நிறுத்தும் படி கூறிவிட்டு இறங்கிப் பார்த்தபோத வீதியில் கால் வைப்பதற்குக் சுட இடமின்றி இறந்த உடல்கள் பரவிக் கிடந்தன.
ஒரே நாட்டின் இரண்டு வேறுபட்ட இனங்கள் ஒரே மொழியைப் பேசுகின்றார்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கின்றார்கள். உலகநாடுகள் அவர்களை மக்களாகக் கணித்து அவர்கள் பக்கம் பார்க்க மறுக்கின்றது. இந்நிலையில் எப்படித் தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றார்கள்.
இத்திரைப்படத்தில் கொட்டேல் மனேஜராக நடித்த Don Cheadle சிறந்த நடிகர் இறுதித் தேர்விற்கு இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

This page is powered by Blogger. Isn't yours?